அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட இளைஞன்.. காதலியை தொடர்ந்து காதலனும் தற்கொலை… பின்னணி என்ன?

611

கேரளா…

கேரளா மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ளது கொத்தநல்லூர் என்ற கிராமம். இங்கு அருண் வித்யாதர் (32) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்களான இவர்கள், அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அருண், தனது காதலிக்கு தெரியாமல் தனிமையில் இருப்பதை இரகசியமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்துள்ளார். இவ்வாறாக இவர்கள் ஒவ்வொரு முறையும் நெருக்கமாக இருப்பதை அருண் வீடியோ புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தார். இப்படியே நாளடைவில் அருணின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் இந்த தகராறு முற்றிப்போகவே, அந்த இளம்பெண் அருணை பிரேக் அப் செய்துள்ளார். அருண் அவரிடம் கெஞ்சியும், அந்த பெண் உறவை தொடர விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அருண், தன்னை தொடர்ந்து காதலிக்காவிட்டால், தான் எடுத்து வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.


இதனால் பெரும் அதிர்ச்சி கொண்ட அந்த இளம்பெண், தனது காதலன் அருண் மீது காவல்துறையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் பெரும் ஆத்திரமடைந்த அருண், அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மணிப்பூரில் உள்ள ஐ.ஏ.எஸ் ஆபீஸரான இளம்பெண்ணின் சகோதரியின் கணவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு, தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அது இவரால் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது காதலியின் குடும்பத்தாருக்கு தெரிய வரவே, பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனிடையே அருண் தலைமறைவாகிவிட்டார். இந்த சூழலில் தங்கள் மகளின் இறப்புக்கு காரணம் அருண் தான் என்றும், அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் அருண் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், காசர்கோடு காஞ்சங்காட்டிலுள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய அருண், தன்னை கைது செய்ய போலிசார் தீவிரமாக தேடி வருவதை தெரிந்துகொண்டார். இதனால் மிகுந்த பயத்தில் இருந்த அவர், போலீசுக்கு பயந்து லாட்ஜின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து அருணின் உடலையும் மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலனால், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசுக்கு பயந்து காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.