அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் வரும் மக்களுக்கு முக்கிய தகவல்! மேலும் கடுமையாக்கப்பட்டுள்ள விதி!!

679

அமெரிக்காவில் இருந்து பிரான்சிற்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸ் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனாவால் உயிர் ஆபத்து என்று பெயரிடப்பட்டுள்ள 16 நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரான்சிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாட்டின் பிரதமர் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக, பஹ்ரைன் மற்றும் பனாமாவில் இருந்து பயணிகளுக்கு இந்த விதி மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


அதாவது, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முந்தைய 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் -19 சோதனையின் எதிர்மறையான முடிவை முன்வைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பிரெஞ்சு குடியிருப்பாளர்கள் மற்றும் பிரான்ஸ் குடிமக்கள் உட்பட அமெரிக்காவிலிருந்து பயணம் செய்யும் எவருக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதி 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிக ஆபத்துள்ள மற்ற 12 நாடுகளான தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா, பிரேசில், இந்தியா, இஸ்ரேல், குவைத், மடகாஸ்கர், ஓமான், பெரு, கத்தார், செர்பியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்வதற்கு முன் சோதனை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.