இளம் வயதில் விதவையாகி தனியாக வசித்த பெண்! கிராம மக்களால் அவருக்கு நேர்ந்த கொடூரம்… கண்ணீர் புகைப்படம்!!

790

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

அந்த பெண் ஒரு சூனியக்காரி எனவும் அவர் தான் கணவரை மாந்திரீகம் செய்து கொன்றுவிட்டார் எனவும் ஊர் மக்கள் அவர் மீது வீண்பழி போட்டார்கள். இதோடு அப்பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததோடு ஊரை விட்டு காலி செய்ய வற்புறுத்தினார்கள்.

ஆனால் செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் ஊர் மக்களின் கொடுமைகளை பொறுத்து கொண்டு அப்பெண் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கொடூரத்தின் உச்சமாக அந்த விதவை பெண்ணை தூணில் கட்டி வைத்த மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.


வலி தாங்காமல் அவர் அழுத நிலையில், இது குறித்து தன்னார்வல நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் கூறுகையில், மூடநம்பிக்கை காரணமாக கிராம மக்கள் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளனர், இது போன்ற செயல்களை செய்தால் அது குற்றம் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.