தமிழகத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொலை செய்த இளம்தாய் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவர் மகளிர் சுயஉதவி குழுவில் தவணை தொகை வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரும் காட்டுமன்னார்கோவில் அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா(22) என்பவரும் காதலித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு வயதில் மீனலோட்சினி என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் குழந்தை மீனலோசினிக்கு பிறந்த நாளுக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என நேற்று மதியம் கணவரிடம் கூறியுள்ளார்.இதனை பாலமுருகன் பொருட்படுத்தவில்லை, இதோடு பெண்களுடன் எந்நேரமும் போனில் பேசி வந்தார். இது தொடர்பாகவும் கணவருடன் பிரியங்கா சண்டை போட்டார். பின்னர் பாலமுருகன் வெளியில் சென்று விட்டார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
கணவரின் செயலால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியங்கா தனது குழந்தை மீனலோட்சினியின் கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அவரும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே அவரது வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் பிரியங்காவும், மீனலோட்சினியும் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரியங்கா, மீனலோட்சினி ஆகியோரது உடல்களை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.