என் கணவரை கொன்றுவிட்டனர்! வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தமிழருக்கு என்ன ஆனது? அதிர்ச்சி தகவல்..!

887

வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த நபர் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். சந்திரா என்ற பெண் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், நான் கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர். எனது கணவர் கடந்த 25ஆம் திகதி தேதி சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அன்று முதல் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

அன்று இரவு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில், கொரோனா சோதனை எடுத்து சுந்தரவேலு என்பவர் இங்கு உள்ளார் என அதில், குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் நட்சத்திர ஹொட்டலின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கொரோனா சோதனை செய்து தனிமைப் படுத்தியவருக்கு அரசுதான் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும், அந்த ஹொட்டல் தான் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். கொரோனா சோதனை செய்கிறேன் என கூறி கணவரை கொன்று விட்டனர். எனது கணவர் இறப்புக்கு நியாயம் வேண்டும் என்று கதறி அழுவது போல உள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவேலு என்பவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 29ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவி சந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது என கூறியுள்ளனர்.