கொரோனா வார்டில் திடீரென நீர்வீழ்ச்சி போல் கொட்டிய மழை நீர்.. நடுங்கிய நோயாளிகள்: சிக்கிய வீடியோ ஆதாரம்!!

813

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் வார்டில் நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொட்டிய சம்வம் வீடியோவா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனை கொரோனா வார்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தளத்தில் உள்ள துளையிலிருந்து கொட்டிய மழை நீரை சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நடுக்கத்துடன் பாரத்துள்ளனர்.


இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து செயல்படும் எல்-2 மருத்துவமனையின் கொரோனா வார்டு ஆகும்.

பரேலி மாவட்ட நிர்வாகம் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது,

இது கட்டுமானப் பணிகள் காரணமாக பிளம்பிங்கில் ஏற்பட்ட தவறு மற்றும் நோயாளிகள் விரைவில் வெளியேற்றப்பட்டனர் என தான் பிரேலி துணை மாஜிஸ்திரேட் இஷான் பிரதாப் சிங் கூறினார்.