டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து, இது குறித்து பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர், இறந்து போன மனித சடலங்களை இப்படி இழிவாக நடத்தியது மனிகுலத்தை வெட்கப்படச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில உள்துறை மற்றும் கொல்கத்தா மாநகராட்சி ஆணையாளரிடம் மேற்கு வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த மேற்குவங்க சுகாதாரத் துறை, வீடியோ போலியானது என்று கூறியதுடன், அரசு மருத்துவமனைகளில் அநாதையாக கிடந்த உடல்கள் அவை என்றும், அவற்றுக்கும் கொரோனா பாதிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.