அமெரிக்காவில் சிறுவனை நைசாக கடத்தி சென்று அவனிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஜெசிகா பிராட் என்ற 26 வயது இளம்பெண் 16 வயதுக்கு குறைவான சிறுவனிடம் நைசாக பேசி தனது தந்தை மற்றும் மாற்றந்தாய் இருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுவனிடம் ஜெசிகா தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டுள்ளது.
இதே போல சில தடவை ஜெசிகா நடந்து கொண்டார் எனவும் நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனும் சாட்சியளித்துள்ளான்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜெசிகா நீதிமன்றத்தில் ஆஜரானார், அவர் இரு தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 24ஆம் திகதி ஜெசிகா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என தெரியவந்துள்ளது.