சீனாவில் டேங்கர் லாரி வெடித்து விபத்து..! பத்து பேர் பலி..! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

885

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஒரு எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து அதிவேக நெடுஞ்சாலையில் வீசியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வென்லிங் நகரில் உள்ள லியாங்சன் கிராமத்திற்கு அருகே மாலை 4:40 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்பால், ஷென்யாங்-ஹைகோ அதிவேக நெடுஞ்சாலையில் அருகிலுள்ள சில குடியிருப்பு வீடுகள் மற்றும் தொழிற்சாலை பட்டறைகள் இடிந்து விழுந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள உணவகத்தில் பணிபுரியும் லு ஃபாங், சின்ஹுவாவிடம், ஒரு உரத்த இரைச்சலைக் கேட்டதாகவும், இது எக்ஸ்பிரஸ்வேயில் பொதுவாகக் கேட்கப்படும் ஒரு டயர் வெடிப்பு என்று நினைத்ததாகவும் கூறினார். ஆனால் சீனாவின் சமூக ஊடகமான வி சாட் குழுக்களில் மக்கள் உடனடியாக குண்டுவெடிப்பு செய்திகளைப் பகிரத் தொடங்கினர். சில புகைப்படங்களும் வீடியோக்களும் வீடுகளின் முன்புறம் டேங்கர் வெடிப்பில் இடிந்து விழுந்ததைக் காட்டியது.


“என் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இருந்த கண்ணாடி அனைத்தும் சிதைந்தன. அதிர்ஷ்டவசமாக என் அம்மாவும் சகோதரனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று லு கூறினார்.

அரசு நடத்தும் சிஜிடிஎன் டிவி ஆன்லைனில் வெளியிட்ட வீடியோ, வெடித்துச் சிதறிய வாகனத்தின் குப்பைகள் சுற்றிலும் பறப்பதைக் காட்டியது. இதனால் அருகில் இருந்த குடியிருப்பு பிரிவுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.