தறிகெட்டு திரிந்த மகளை துவம்சம் செய்த தந்தை : காட்டுக்குள் அரங்கேறிய பயங்கரம்!!

25579

திருச்சி….

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மூத்த மகள் பிரியங்கா. பிரியங்காவை தவிர ஒரு மகள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் அறிவழகனுக்கு உள்ளனர்.

சிறு வயது முதலாகவே பிரியங்கா ஆண் நண்பர்களுடன் அதிகம் பழகி வந்துள்ளார். அவர்களுடன் படத்திற்கு போவது, வெளியே சுற்றுவதுமாக பிரியங்கா இருந்திருக்கிறார். தந்தை எவ்வளவோ கண்டித்து பார்த்தும் பிரியங்கா திருந்தவில்லை.

இந்த சூழலில், பக்கத்து ஊரைச் சேர்ந்த சீனு பிரசாத் என்பவரை பெற்றோர் பேச்சை மீறி காதலித்து திருமணம் செய்துள்ளார் பிரியங்கா. இந்த திருமணத்தில் அறிவழனுக்கு விருப்பம் இல்லாத போதும்,


இனிமேலாவது தனது மகள், ஆண்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவார் என அவர் நம்பியிருக்கிறார். அதுபோலவே திருமணமான புதிதில் கணவனுடன் அன்யோன்யமாக இருந்திருக்கிறார் பிரியங்கா.

ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் தனது லீலைகளை அவர் ஆரம்பித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்த பிரியங்காவுக்கு எக்கச்சக்கமாக ஆண் நண்பர்கள் கிடைத்தார்கள்.

அவர்களுடன் வெகுநேரம் செல்போனில் பேசுவது; கணவனுக்கு தெரியாமல் அவர்களுடன் உல்லாசமாக இருப்பது என பிரியங்கா தறிகெட்டு செல்ல ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் பிரியங்காவிடம் இருந்து சீனு பிரசாத் பிரிந்துவிட்டார்.

கணவன் பிரிந்தது மிகவும் வசதி என நினைத்த பிரியங்கா, ஆண் நண்பர்களுடன் தனது காமக்களியாட்டங்களை ஆரம்பித்தார். பிரியங்காவின் இந்த நடவடிக்கை ஊர் முழுவதும் தெரியவந்ததால் அவரது பெற்றோருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரியங்காவின் நடத்தை சரி இல்லாததால் அவரது தங்கை, தம்பிக்கும் வரன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அறிவழகன், மகள் பிரியங்காவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, நாமக்கல்லில் ஆண் நண்பருடன் தங்கியிருந்த பிரியங்காவை கடந்த 21-ம் தேதி பார்க்க சென்றிருக்கிறார் அறிவழகன்.

தந்தையை பார்த்த பிரியங்கா, அவரிடம் நலம் விசாரித்துள்ளார். அதன் பின்னர், வீட்டில் அனைவரும் உன்னை பார்க்க ஆசைப்படுகிறார்கள் எனக் கூறி தனது பைக்கில் வைத்து அவரை அறிவழகன் அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போது முசிறி அருகே ஒரு காட்டுப் பகுதிக்கு வந்ததும் பைக்கை நிறுத்திய அறிவழகன், பிரியங்காவை தன்னுடன் வருமாறு கூட்டிச் சென்றிருக்கிறார். பிரியங்காவும் ஒன்றும் புரியாமல் தந்தையுடன் சென்றிருக்கிறார்.

சிறிது தூரம் சென்றதும் திடீரென ஆவேசமாகி கத்திய அறிவழகன், பிரியங்காவை மூர்க்கத்தனமாக கைகளாலும், கால்களாலும் தாக்கியுள்ளார். தொடர்ந்து நடந்த இந்த பயங்கர தாக்குதலில் பிரியங்கா இறந்திருக்கிறார்.

அதன் பின்னர் அறிவழகன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசவே அங்கு சென்று போலீஸார் பார்த்த போது, பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், தந்தை அறிவழகன் தான் பிரியங்காவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அறிவழகனை போலீஸார் கைது செய்தனர்.