கோயம்புத்தூரின் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி திலகவதி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும்- சக்திவேலுக்கும் இடையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியில் கறிக்கடை வைத்துள்ள பத்மநாபன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பத்மநாபனின் மனைவியும் பிரிந்து வாழ்வதால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி தனிமையிலும் சந்தித்துக் கொண்ட நிலையில் பத்மநாபன், திலகவதியை திருமணம் செய்து கொள்ள எண்ணினார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
ஆனால் அவரோ சில காரணங்களை கூறி மறுத்து வந்துள்ளார், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவேளை திலகவதிக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்குமோ என எண்ணிய பத்மநாபன், திலகவதியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
அதன்படி நேற்று திலகவதியை தொடர்புகொண்ட பத்மநாபன், தாங்கள் அடிக்கடி சந்திக்கும் இடமான தகர கொட்ட கைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது ஆ த்திரத்தில் இருந்த பத்மநாபன் திலகவதியை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துவிட் டு தானும் தூக்கி ட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே திலகவதியை காணவில்லை என அவளது பெற்றோர்கள் புகா ர் அளித்தனர், இதன்படி பொலிசார் ந டத்திய விசாரணையில் தகர கொட்டகைக்குள் கிடந்தது க ண்டுபிடிக்கப்பட்டது.இருவரின் சடலங்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.