திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

955

தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர் ராகேஷ்(36). பொறியியல் பட்டதாரியாக இவர் கொடுங்கையூரில் வசிக்கும் இளம் பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அவர், அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். அதன் பின், அவரின் நடத்தையில் சந்தேகம் வர, உடனடியாக இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ராகேஷ் சர்மா குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


அப்போது தான், ராகேஷ் சர்மா மீண்டும் இந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தனக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இது குறித்து அவர் பொலிசாரிடம் தெரிவிக்க, பொலிசாரின் அறிவுறுத்தல் படி மாதாவரம் ரவுண்டான அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும் படி அவர் கூறியுள்ளார்.

அதன் படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த பெண்ணுடன் சென்ற பொலிசார் மறைந்து நின்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ராகேஷ் பணம் வாங்க வரும் நேரம் பார்த்து, அவரை பிடித்து கைது செய்தனர்.

அவனிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ராகேஷ் சர்மா ஏற்கெனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கத்தாரில் வேலை பார்த்து வந்த அவர் நான் அவனில்லை படத்தை பார்த்து திருமண மோசடியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசி உள்ளார்.

அதில் சிக்கிய பெண்களை ஏமாற்றி நான் அவனில்லை பட பாணியில் பணம், நகைகளை பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது போல் சென்னை உட்பட பல பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராகேஷ் சர்மாவிடம் ஏமாந்த பெண்கள் அவர் குறிட்து புகார் அளிக்க வந்தால், அவர்கள் இழந்த பணம் மற்றும் நகைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.