நடிகை நயன்தாராவுக்கு கொரோனா? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

755

பிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை, இதிலும் குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எழும்பூரில் தனிமையில் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் தான் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் கூட உயிரிழந்த பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here