ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி, கட்டாய திருமணம் செய்துள்ளார் புஷ்பேந்திர சிங் எனும் நபர்.
இவர் பாலைவனம் ஒன்றில் தீ மூட்டி, குறித்த இளம்பெண்ணை பலவந்தமாக தூக்கிக்கொண்டு, நெருப்பை சுற்றி வரும் சடங்கினை செய்துள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்த சடங்கின் போது குறித்த பெண் கதறி அழுதுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புஷ்பேந்திர சிங்கை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Shocker from Rajasthan: A goon abducted a girl from her house & forcefully got married (did 7 phera like this).
Helpless girl couldn’t do anything except crying…
Shame!!! pic.twitter.com/lwKohtF37X
— Mr Sinha (@MrSinha_) June 6, 2023