புகார் அளிக்க வந்த பெண்ணின் முன் சுய இன்பம் செய்த காவல் அதிகாரி..! உத்தரபிரதேசத்தில் கோர சம்பவம்..!

710

உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் ஒரு போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்திற்குள் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் முன்னால் சுயஇன்பம் அனுபவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக தொடர்ந்த இந்த தவறான நடத்தையால் அவதிக்குள்ளான பெண் அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார்.

“பட்னி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பீஷ்ம பால் சிங், காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார்தாரரின் முன் சுயஇன்பம் செய்வதைக் காண முடிந்தது. அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றுதியோரியாஎஸ்பி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர்வாசிகள் அழைப்பு விடுத்துள்ளனர். புகார் அளிக்க தனது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த அதிகாரி தனது அந்தரங்க பகுதிகளையும் தொட்டு துன்புறுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். போலிஸ் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணுடன் பீஷ்ம பால் சிங் தவறாக நடந்துகொள்வது இது முதல் முறை அல்ல என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க அந்தப் பெண் தனது புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வருவதாக கூறப்படுகிறது.

புகார் அளித்த பெண், “நான் அவரின் தவறான நடத்தையை முதல் 2-3 முறை புறக்கணித்தேன், நில மோதலில் அவர் எங்கள் வழக்கை பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் எனது உறவினர் ஒருவரும் இந்த அதிகாரியிடமிருந்து இதேபோன்ற சம்பவத்தை எதிர்கொண்டதாக கூறினார். இதையடுத்தே நான் அவரை படமாக்க முடிவு செய்தேன்.”தவறு செய்த அதிகாரி சலேம்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் இருந்து இரண்டு நாட்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சமீபத்திய சம்பவத்திற்குப் பிறகு, தியோரியா எஸ்.பி. பட்னி காவல் நிலையத்தை பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here