மணமேடையில் ஆடிப்பாடிய மணமக்கள்! பாதியிலேயே புதுப்பெண்ணின் அம்மாவுக்கு வந்த ஷாக் தகவல்!

850

சந்தோஷமாக திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மணமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

கொரோனா காரணமாக திருமணம் போன்ற சடங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது, இ-பாஸ் போன்றவற்றால் பலரும் சிம்பிளாக நாலைந்து பேருடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலில் நடந்த திருமணத்தில் மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காக பெண் வீட்டார் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வான் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.

அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் மணமகன் வீட்டில் விருந்து நடைபெற்றது. தடபுடலாக விருந்து நடைபெற்று கொண்டிருக்கும்போதே மணப்பெண்ணின் தாயாரை சுகாதார அதிகாரிகள் கையோடு அழைத்து சென்றனர்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருமண வீட்டுக்கு வந்த அதிகாரிகள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 45 பேர் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

மேலும் மணமகன், மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், 5 நாட்கள் கழித்து அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.