மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை… உறவினர்களுக்கு போன் செய்து கூறிய உண்மை!

648

மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.காரணம் அமோலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது கடன் தொல்லை காரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரிய வந்தது.

அழகான குடும்பமாக இருந்த 4 பேர் உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here