யாழில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்! இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயம்.

1177

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த இராணுவ அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இன்று மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.”


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.