ரஷ்யாவின் முதுகில் குத்திய சீனா… கடும் கோபத்தில் புடின்! என்ன செய்துள்ளது தெரியுமா?

910

சீனாவின் செயலால், ரஷ்யா கடும் கோபத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக இரு நாட்டு உறவு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் சீனாவிற்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்றால், அது ரஷ்யாவும், வடகொரியாவும் தான். அமெரிக்கா எதிர்ப்பு என்ற குடையின் கீழ் இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால், தற்போது இதில், சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே நிலைமை மோசமடைந்து வருகிறது.

ஏனெனில், கொரோனா பாதிப்பு இருந்த போதே ரஷ்யா, சீனாவின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. ஆனால் பெரிய அளவில் எதுவும் கூறாமலும், கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்றும் கூறாமாலும், ஏதோ குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பது போல் கூறி வந்தது.

அப்போதில் இருந்தே, ரஷ்யா, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட துவங்கிவிட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுவோம் என்று திட்டவட்டமாகவும் ரஷ்யா கூறிவிட்டது.


இதனால், சீனா-ரஷ்யா இடையே இருந்த பல்லாண்டு உறவு, முறிய துவங்கியது. ரஷ்யா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை கண்டு கோபம் அடைந்த சீனா ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க தொடங்கியது. அதன் காரணமாக, ரஷ்யாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது.

இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. இதை சீனா மீண்டும் கேட்க துவங்கியுள்ளது.

இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷ்யா இதையே அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷ்யா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா பிரச்சாரம் செய்து வருகிறது. சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த ரஷ்யா, சீனாவிற்கு அனுப்ப வேண்டிய ஏவுகணைகளை அனுப்ப முடியாது என்று மறுத்தது.

அதாவது, சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை ரஷ்யா வழங்குவதாக கூறியிருந்தது, இந்த பிரச்சனைக்கு பின் இப்போது அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது.

திடீர் என்று சீனாவிற்கு இந்த ஏவுகணைகளை விற்க போவதில்லை. இனி இதை சீனாவிற்கு விற்க போவதில்லை, அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவின் இந்த முடிவு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரஷ்யா இந்த முடிவை சுயமாக எடுக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் முக்கிய காரணம், சீனாவின் உளவாளி ஒருவர் ரஷ்யாவில் பிடிப்பட்டதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு பிரச்சனைக்கும் முக்கிய காரணம், சீனாவின் உளவாளி ஒருவர் ரஷ்யாவில் பிடிப்பட்டது தான், ரஷ்யாவின் ஆர்டிக் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த நபர் ஒருவர் சீனாவின் உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ரஷ்யாவில் இருந்து முக்கியமான உளவு தகவல்களை சீனாவிற்கு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷ்ய அரசு குறித்த ரகசியங்களை இவர் சீனாவிற்கு அனுப்பி உள்ளார்.

இது ரஷ்யாவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில், முக்கியமாக முன்னாள் உளவாளியான புடினை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு நட்பு நாட்டிற்குள் உளவாளியை அனுப்புவது ஏன் பெரிய விஷயம் என்பது புடினுக்கு தெரியும். இந்த நிலையில் மொத்தமாக சீனாவுடன் உறவை முறிக்க புடின் தயாராக இருப்பதாக செய்தி வெளியானது.

இதையடுத்து அந்த உளவாளி பிடிபட்டது குறித்து சீனா அளித்த விளக்கம் மேலும் புடினை கோபப்படுத்தியுள்ளது. நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகவே அவரை அனுப்பினோ, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை, எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட இதை செய்தோம் என்று சீனா கூறியுள்ளது. இதனால் புடின் சீனா விஷயத்தில், நிச்சயமாக ஒரு முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.