வெளிநாட்டில் பணிபுரியும் கணவனுக்கு மனைவி குறித்து வந்த அதிர்ச்சி செய்தி! சிக்கிய 3 பெண்கள்… தலைசுற்றவைக்கும் பின்னணி!

901

இந்தியாவில் திருமணமான இளம்பெண் மற்றும் அவரின் ஐந்து வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் Qila Barun கிராமத்தை சேர்ந்தவர் அமந்தீப் சிங். இவர் மனைவி நிர்மல் கவுர் (31). இந்த தம்பதிக்கு குர்லின் (5) என்ற மகள் இருந்தார்.

அமந்தீப் கட்டார் நாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி சிறுமி குர்லின் மர்மமான நிலையில் உயிரிழந்தார்.

அதே போல நிர்மல் கவுர் கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் வீட்டருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.


அப்போது 12ஆம் திகதி நிர்மல் கவுர் வீட்டுக்கு ஹர்பிரீத் சிங், அவர் தாய், அத்தை, மாமா மற்றும் இன்னொரு உறவினர் வந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து பொலிசார் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், அமந்தீப் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் மனைவி நிர்மல் கவுருக்கு ஹர்பிரீத்துடன் தொடர்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

ஆனால் இதற்கு சிறுமி குர்லின் தடையாக இருப்பதாக இருவரும் கருதிய நிலையில் அவளுக்கு அதிகளவில் வாயில் மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர்.

பின்னர் நிர்மல் கவுர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை ஹர்பிரீத் மற்றும் அவர் அத்தை பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து ஹர்பிரீத் தனது உறவினர்களுடன் சேர்ந்து நிர்மல் கவுருக்கும் அதிகளவு மருந்து கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், இந்த வழக்கில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளோம்.

வெளிநாட்டில் உள்ள அமந்தீப் தனது மனைவி மற்றும் மகள் மரணம் குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து அது தொடர்பில் அங்கிருந்தே புகார் அளித்தார்.

மேலும் இந்த கொலை வழக்கில் உயிரிழந்த நிர்மல் கவுர் தந்தை கராமித்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பொலிசார் அவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.