அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி : அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்!!

970

பவானி தேவி..

டோக்கியோவில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனையான பவானி வாள்வீச்சு விளையாட்டில் கலந்து கொண்டார்.

முதலாவது சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகினார். ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டாவது சுற்றில் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு போட்டியை விட்டு வெளியேறினார்.


இதுகுறித்து பவானிதேவியின் தாய் கூறுகையில், முதல் சுற்றில் வெற்றி பெற்ற பின்னர் பவானி தேவி தைரியமாக தான் இருந்தாள்.

ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்ததும், மேடையில் இருந்து இறங்கி நேராக ரூமிற்கு சென்ற அழத் தொடங்கினாள்.

சில மணிநேரத்துக்கு பின்னர் இந்த தோல்வியை பற்றி யாரும் நினைவூட்ட வேண்டாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு நான் தயாராக வேண்டும். அதற்கு நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.