முதலிரவில் பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதியர்.. மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

841

உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் யாதவ். இவரது மகன் 22 வயது பிரதாப் யாதவ் . இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது புஷ்பா தேவிக்கும் வீட்டில்பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி, மே 30ம் தேதி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மே 31ம் தேதி ஊர்வலமாக புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. விடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஜோடி இருவரும் வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்து திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.

உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக இருந்தனர். உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவே இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களும் பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பெற்றோர்கள் இந்த செய்தியால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இருவரின் உடலிலும் எந்த காயமும் இல்லாத நிலையில், பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தம்பதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தம்பதிக்கு முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாமல் இருந்துள்ளது.

இதுவே மூச்சு திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜோடி இருவருக்கும் ஒன்றாக இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முதலிரவில் திருமணத் தம்பதி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.