லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்!!

2072

சென்னையில்..

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராணி (43). இவர் தனக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, தனது சொந்த கார் ஓட்டுநரை அழைத்து செல்வதாக குற்றசாட்டுக்கள் எழுந்தது.

இவர் போக்குவரத்து விபத்துகள் நடக்கும் போதும், அது குறித்து விசாரணை நடத்த செல்லும் போதும், தனக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை அழைத்து சென்றார்.

அந்த வழக்கறிஞர்கள் வாயிலாக, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடாக கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது.


இதில் முரண்படுவோரை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் தாம்பரம் சரக காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தனர்.

அதுமட்டுமின்றி உளவுத்துறை போலீஸாரும் ஏற்கெனவே ஆய்வாளர் ராணி மீது உள்ள குற்றச்சாட்டுகளை அறிக்கையாக தாம்பரம் சரக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையாவிற்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நடத்திய விசாரணையில் ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிவந்ததை அடுத்து அதனை அறிக்கையாக காவல்ஆணையரிடம் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராணி கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் போக்குவரத்து ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து,

ஆய்வாளர் ராணியை பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.