வெளிநாட்டில் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலன் : இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

11362

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஜெகதீஸ்வரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரிக் என்ற இளைஞரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே, இம்ரான் ஃபரிக் பணிக்காக மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்து ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்ட அவர், மலேசியாவுக்கு அவரையும் அழைத்துள்ளார்.

இதனால் அவரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி மலேசியா சென்றுவிட்டார். அங்கு அதேமாதம் 28ஆம் தேதி வரை மலேசியாவில் காதலன் இம்ரான் பரிக் உடன் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.


அவர்கள் ஒரே வீட்டில் இருந்ததால் அப்போதும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் ஜெகதீஸ்வரி கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி உள்ளார். சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

ஜெகதீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார். இதனையடுத்து இளம்பெண் மற்றும் அவரது பெற்றோர் இம்ரான் பரிக் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதோடு ஜெகதீஸ்வரிடம் இம்ரான் பஃரிக் செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரி தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

அதில், தனது காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் அல்லது தன்னை ஆசை வார்த்தை கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.