Saturday, April 20, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியன்று, அவரது ரசிகர்கள் சிறப்பான வகையில் கொண்டாடி வருவது தெரிந்ததே. மேலும் அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது டீசர், டிரைலர் ஏதாவது வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே ஸ்தம்பித்து போய் இருப்பதால்...
உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான். பல மாதங்களாக வேலை இல்லாத நிலையில் பிரபல நடிகர் ஆஷிஷ் ராய் வறுமையில் வாடி வருகிறார். நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது பணம் கட்ட முடியாத சூழலில்...
கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கி நடித்து வெளிவந்த படம் தங்கமீன்கள். இந்த படத்தில் ராமின் குழந்தையாக நடித்திருப்பவர்தான் சாதனா லட்சுமி. இவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?…தங்க மீன்கள் படத்தில் செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சாதனா. இதனால் செட்டில் கூட இவரை செல்லம்மா என்று தான் அழைப்பாரம் இயக்குனர் ராம்.சாதனா தற்போது துபாயில் உள்ள ஒரு இந்தியர்களுக்கான பள்ளியில் படித்து வருகிறார். அவரது குடும்பமும் அங்கு தான்...
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாரம்பரிய முறைக்கு அப்பால் அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த 5 வருடத்தில் நிறுவனங்களை பொறுப்பேற்கும் போதும் தற்போதைய...
கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார். வாங்கிய விருதை தன்னை உயர்த்தும்...
சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை எடுத்து வந்த கொள்கலன் பெட்டியில் இந்த விலங்கு இருந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த பின்னர், முத்துராஜவெல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்...
சில நாட்களுக்கு முன்பு பெண்குயின் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கண்களிலும் பதட்டத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று அப்படித்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இந்தப்படம் தென்னிந்தியாவில் மூன்று முக்கிய மொழிகளில் வெளியிடப்படுவதால் அந்தந்த மொழிகளிலுள்ள மிகப் பிரபலமான முன்னணி நடிகர்களை வைத்து இதன் டிரைலர் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே இதன் டீசரை பார்த்துவிட்டு பலரும் இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என யோசித்து வரும் வேளையில் இப்போது இந்த மூன்று...
பிரபல நடிகை குஷ்பு தனது உடல் எடையை பயங்கரமாக குறைத்து தற்போது உள்ள முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல் ,சத்யராஜ் ,கார்த்திக் ,சரத்குமார் போன்ற பல்வேறு கதாநாயகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்...
பிரபல சீரியல் நடிகையான சரண்யா, தான் பேச்சாளரை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் நடிகை சரண்யா. அதன் பின் பல்வேறு தொடர்களில் நடித்து வரும் இவர், தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராகுல் சுதர்ஷனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இவர்கள் இருவரும்...
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடி அங்கு கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி ஹாங்காங்கில் முன்னர் பதுக்கி வைத்திருந்த ரூ.1350 கோடி மதிப்புள்ள வைரம், முத்துக்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான PNB ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி, தனது மோசடி குறித்து செய்திகள் வெளியான பின்பு நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பியோடினார். உடன் அவரின் உறவினர் மெலுக் சோஸியும் ஓடினார். இந்த...