ஒட்டகத்தின் விஸ்வாசம்! 7 நாட்கள் தனியாக பாலைவனத்தை எல்லாம் தாண்டி உரிமையாளரகை கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்!!

814

சீனாவில் விசுவாசமுள்ள ஒட்டம் ஒன்று சுமார் 100 மைல் தொலைவில் வேறொரு நபருக்கு விற்ற பின்னரும், அது தன்னுடைய முன்னாள் உரிமையாளரை தேடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Bayannur பகுதியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வயதான ஒட்டகம் ஒன்றை சுமார் 62 மைல்களுக்கு தொலைவில் வேறொரு நபரிடம்(ஓட்டகம் வளர்க்கும் நபர்) கடந்த அக்டோபர் மாதம் விற்றுள்ளார்.

ஆனால் வாங்கப்பட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு அந்த விசுவாசமுள்ள ஒட்டகம், கடந்த ஜுன் மாதம் 27-ஆம் திகதி அங்கிருந்து வெளியேறி உரிமையாளரை கண்டுபிடிக்க பாலைவனம், கூர்மையான வேலிகள் மற்றும் பரபரப்பான நெடுஞ்சாலைகள் போன்றவற்றை எல்லாம் தாண்டி வந்துள்ளது.

ஒரு கட்டத்தில், அந்த உள்ளூர் பகுதியின் ஒட்டகம் மேய்ப்பவர் இந்த ஒட்டகத்தின் உரிமையாளர்களை தெரியும் என்பதால், அவர் அந்த ஒட்டகத்தை உரிமையாளரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளார்.


இதைக் கண்ட அவர்கள், ஒட்டகத்தின் விசுவாசத்தைக் கண்டு சற்று கண்கலங்கினர். அதன் பின் அவர்கள் புதிய உரிமையாளரை தொடர்பு, இந்த ஒட்டகத்தை தங்களுடனே வைத்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி வேறொரு ஒட்டகத்தை கொடுப்பதற்கு இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். நாங்கள் இனி இதை எதற்கு விற்கமாட்டோம், என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த ஒட்டகம் 7 நாட்கள் தனியாக யாருடைய உதவி இல்லாமல் உரிமையாளர் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.