கணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்! திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

302

இந்தியாவில் அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு. இளம்பெண்ணான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சோனுவும், அவர் கணவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில் கவுரவ் என்ற நபரை சோனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறு அன்று திருமணம் நடக்கவிருந்தது. இதை தொடர்ந்து மணப்பெண் சோனு திருமண அலங்காரம் செய்து கொள்ள வீட்டருகில் உள்ள அழகுநிலையத்துக்கு சென்றார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அப்போது அங்கு வந்த இளைஞன், சோனுவை அழகுநிலையத்தில் இருந்து வெளியில் வருமாறு அழைத்தான். பின்னர் திடீரென உள்ளே புகுந்த அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கூரான ஆயுதத்தால் சோனுவை சரிமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றான்.

இரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சோனு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் மாப்பிள்ளை கவுரவ் மற்றும் அவர் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது திருமண கனவு கலைந்ததை உணர்ந்த கவுரவ் கதறி அழுதார். சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார் காதல் பிரச்சனையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதோடு கொலையாளியை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.