மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட இதுதான் காரணமா?

28722

தாலி..

பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது.

தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றது.

திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டும் மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.

கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்பொழுதும் அவன் கட்டிய தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அந்த பெண் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அர்த்தமாகும்.

பெண்ணின் மார்பில் உயிரோட்டம் உள்ள இதயத்தில் இந்த தாலி பட்டுக் கொண்டு இருக்க, அது ஒரு சீன மருத்துவ முறையில் அக்குபஞ்சர் முறை போன்று செயல்படுகின்றதாம்.

அதுமட்டுமல்லாமல் மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்த போதெல்லாம் நிறைய சுகபிரசவங்கள் இருந்ததுடன், மார்பக புற்றுநோயின் பாதிப்புகளும் குறைவாக இருந்ததாம்

தாலியில் உள்ள ஒன்பது இழையின் குணங்கள் என்ன?

தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
மேன்மை குணம்
தொண்டு குணம்
தன்னடக்க குணம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here