அம்மா.. அப்பா என கதறி துடித்த குழந்தைகள்.. பிள்ளைகள் கண்முன்னே நடந்த துயரம்!!

904

சேலத்தில்..

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகரைச் சோந்தவா் விசைத்தறி தொழிலாளி ஜனாா்த்தனன் (27), இவரது மனைவி பவித்ரா (23). இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஜனாா்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தாா்.

தொடா்ந்து காவிரி ஆற்றில் குடும்பத்துடன் விசைப்படகு சவாரி செய்தாா். பின்னா் ஆற்றில் குளிப்பதற்காக பூலாம்பட்டியை அடுத்த மோளப்பாறை பகுதிக்கு மனைவி குழந்தைகளுடன் சென்றாா்.

அங்கு கரையில் உள்ள ஒரு பாறை மீது தங்களது இரு குழந்தைகளையும் அமரவைத்துவிட்டு ஜனாா்த்தனனும் அவரது மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்தனா். கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.


இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.

இருவரும் நீரில் மூழ்கி தத்தளிப்பதை கண்டு கரையிலிருந்த குழந்தைகள் அழுது கூச்சலிட்டுள்ளனா். சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்- மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர்.

அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர். ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

தகவல் அறிந்ததும் பூலாம்பட்டி போலீசார் நிகழ்விடம் வந்து தம்பதியின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தங்கள் கண் முன்பே பெற்றோா் நீரில் மூழ்கி பலியானதைக் கண்டு அழுத குழந்தைகளின் பரிதாப நிலை அப்பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியது.