ஆபாசப் படம் பார்த்து 14 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்!!

1272

தொலைபேசி…

இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து, 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், மாணவனின் இணைய வழி கல்விக்காக, பெற்றோர்கள் 27,000 ரூபாவுக்கு கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அந்த தொலைபேசியில் ஆபாசப்படங்களை பார்த்து பழக்கமடைந்த மாணவன், ஆபாச வீடியோவில் பார்த்த காட்சியை போல மாணவியுடன் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளான்.


இந்நிலையில் சிறுமி தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, சிறுமியை தாயார் முல்லேரியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

சிறுமியும் மாணவனும் ஒரே பாடசாலையில் 9, 10ஆம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் என கூறப்ப்டுகின்றது. இருவருக்குமே அவர்களின் நடவடிக்கையின் தீவிரம் குறித்து சரியான புரிதல் இல்லை என்றும், இதனால் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் உறுதியானது என்றும் விசாரணை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் , இருவருக்குமிடையில் காதல் தொடர்பில்லை என்பது பொலிசாரின் நீண்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.