இளம்பெண் மரணம் : மெடிக்கல் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு… நடந்தது என்ன?

532

பெரம்பலுார்..

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சன்னாசியப்பா கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி வேளாங்கன்னி இவர், சு.ஆடுதுறை கிராமத்தில் வினோத் என்ற பெயரில் மெடிக்கல் வைத்துள்ளார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெற்றிவேல் கோயம்புத்துாரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டம், அத்தியூர் கிராமத்தில் தமிழ் என்ற பெயரில் மெடிக்கல் வைத்திருக்கும் கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவருடன் வேளாங்கன்னிக்கு பழக்கம் ஏற்பட்டது.


இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனால், வேளாங்கன்னி மீண்டும் மூன்றாவதாக கருவுற்றார்.

இக்கருவை கலைப்பதற்காக இளையராஜா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வேளாங்கன்னிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது இதில், வேளாங்கன்னிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி, உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேளாங்கன்னி லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேளாங்கன்னி இறந்தார்.

இது குறித்து, வேளாங்கன்னியின் தாய் தனலட்சுமி என்கிற கேத்ரின்,60, மங்களமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.