உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஆரம்பம்!!

268

ஜல்லிக்கட்டு…

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு ப.லத்த பா.து.கா.ப்புக்கு மத்தியில் இன்று நடைபெறுகிறது.

தற்போது வாடிவாசலில் சீறிப் பாய காத்திருக்கும் 783 காளைகளை அடக்குவதற்கு, 649 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு குவிக்கப்பட்டுள்ளது.


பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.