உ யி ரை ப றிக்கும் பழங்கள்! சாப்பிட்டால் ம ர ண பிடியில் மாட்டி கொள்வீர்கள்! ஆய்வில் வெளிவந்த தி டுக்கிடும் தகவல்!!

372

பழங்கள்……….

மனிதன் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த DNA தான் மிக முக்கிய காரணியாக உள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இதன் மாறுபாட்டால் தான் நாம் இன்று மனிதர்களாக உருப்பெற்று இருக்கின்றோம்.

DNA-வின் வளர்ச்சி சரிவர இருந்தால் எந்தவித பாதிப்பும் உடலுக்கு ஏற்படாது. அதுவே இதன் வளர்ச்சி சீரற்ற முறையில் இருந்தால் மனிதராக மாறுவதற்கு பதிலாக ஒழுங்கற்ற உயிரினமாக மாறி இருப்போம்.

இத்தகைய தாக்கத்தை நாம் சாப்பிட கூடிய இன்றைய உணவுகள் ஏற்படுத்துகின்றன என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக எளிதான முறையில் சாப்பிட உதவும் விதை இல்லாத பழங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

விதை இல்லாத பழங்களை சாப்பிடுவதால் ஏராளமான தீமைகள் உடலுக்கு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


இதில் மோசமான செய்தி என்னவென்றால், இந்திய நாட்டில் இது போன்ற பழங்களின் வருகை அதிகரித்து வருவதே. விதை இல்லாத பழங்களை சாப்பிடுவதால் ஏற்பட கூடிய உடல் மாற்றங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொண்டு, எச்சரிக்கையாக இருப்போம்..!

புது புது மோகங்கள்..!
காலங்கள் மாற மாற மனிதனின் ஆசைகளும், அதன் தாக்கத்திற்கும் கட்டுப்பாடு இல்லாமலே போகிறது. மனிதன் நினைத்தை உருவாக்கியதன் விளைவு தான் இந்த விதையற்ற பழங்கள். பொதுவாகவே பழங்களை தான் நாம் ஆதி காலத்தில் இருந்தே உணவாக உண்டு வருகின்றோம். ஆனால், இதுவே இன்று விஷமாக மாறியுள்ளது.

ஒற்றுமையும் ஆபத்தும்..!
விதையில்லாத பழங்கள் மற்றும் விதையுள்ள பழங்கள்…இவை இரண்டின் தோற்றமும் ஒரே மாதிரிதான் இருக்கும். விதையில்லாத பழங்கள் அதிக சுவை கொண்டதாக இருக்கும். விதையுள்ள பழங்கள் மிதமான சுவை கொண்டதாக இருக்கும். மேலும், விதை இல்லா பழங்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். விதை இல்லாததால் எப்படி உடலுக்கு தீங்கு ஏற்படும் என்கிற கேள்விக்கு காரணம் இதன் DNA தான்.

DNA மாற்றம்..!
பொதுவாக ஒரு பழத்தை நம் விருப்பத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என்றால், அதன் DNA- வை மாற்றி அமைத்தால் போதும். இது பழங்களுக்கு மட்டுமில்லை. மனிதன், காய்கறி, விலங்குகள் இப்படி எல்லா வித ஜீவ ராசிகளுக்கும் இது போன்ற மாற்றத்தை அறிவியலால் ஏற்படுத்த முடியும்

அபாயம்..!
இப்படி DNA மாற்றம் செய்யப்படுவதால் அதன் உண்மை பண்பு முழுவதுமாக மாறி விடும். எடுத்துக்காட்டாக, மனிதனின் DNA-வை மாற்றம் செய்தால் அவனின் 6 அறிவு மாற்றம் பெறும். இதனால் எதை பற்றியும் சிந்திக்காமல் மனிதன் மிருகத்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்படுவான். இதே நிலை தான் விதை இல்லாத பழங்களுக்கும்..!

என்னென்ன பழங்கள்..?
இப்படி DNA மாற்றம் பெற்ற பழங்கள் அதிக அளவில் சந்தையில் விற்கப்படுகிறது. இதை நம் நாட்டிலே உற்பத்தி செய்தும், வெளி நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்தும் விற்கின்றனர். குறிப்பாக திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி போன்றவை முதல் இடத்தில் உள்ளன.

விரும்ப காரணம்..?
இன்றைய கால கட்டத்தில் நல்லதை எடுத்து சொல்ல ஆளும் இல்லை. மீறி எடுத்து சொன்னால் மக்கள் அதனை உதாசீனப்படுத்தியும் விடுகின்றனர். இதே நிலை தான் விதையில்லாத பழங்களிலும் நடக்கிறது. இதன் சுவைக்காகவும், எளிதில் உண்ண முடியும் என்பதற்காகவும் அதிகம் விரும்ப படுகிறது. இதே பழங்களை தான் ஜுஸ் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கிறன.

 

விதைக்கும் விலையே..!
நாம் விதை இல்லாத பழங்களை சாப்பிட மாறி விட்டோம். ஆனால், வெளி நாடுகளில் விதை உள்ள பழங்களை வைத்து தான் மிக பெரிய வியாபாரமே நடக்கிறது. அதாவது, பழங்களின் விதைகளை விற்று அதில் இருந்து கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர். உதாரணமாக 1 கிலோ திராட்சையின் விதை 1200 டாலர் வரை விலை போகிறதாம்.

பக்க விளைவுகள்..!
சுவைக்காக எதையுமே சாப்பிட கூடிய நிலைக்கு இன்று நாம் வந்து விட்டோம். அந்த வகையில் சுவைமிக்க விதை இல்லா பழங்களை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி மண்டலம் பெரிதும் பாதிப்படையும். பலருக்கு இது புற்றுநோய் அபாயத்தையும் உண்டாக்கும்.

DNA சிதைவு.!
விதை இல்லா பழங்களை சாப்பிட்டு வருவதால், நேரடியாக DNA-வை பாதித்து, நாளடைவில் சிதைவடைய செய்யுமாம். மேலும், இதில் பயன்படுத்தப்படும் அதிக அளவிலான ரசாயனங்கள் செரிமான கோளாறு, வயிற்று போக்கை உண்டாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக விதை இல்லா பழங்கள் சுற்றுசூழலில் மிக பெரிய அபாயத்தை உண்டாக்கி விடும்.

மாற்றம்..!
நாம் வாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது உணவுகள் தான். இப்போது உணவுகளே விஷமாக மாறி வருகிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால், முதலில் நாம் இந்த வகை உணவுகளை வாங்குவதை நிறுத்த வேண்டும். மேலும், இயற்கை வழி விவசாயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம்மாழ்வார் போன்றார் இறுதி மூச்சு வரை போராடிய விவசாய போராட்டம் அவருடன் முடிந்து விட கூடாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.