ஊரடங்கின்போது தோட்டவேலை செய்த நபர்… தோட்டத்தில் இருந்த திறப்பு: உள்ளே சென்றபோது காத்திருந்த ஆச்சரியம்!!

326

பிரித்தானியா…….

பிரித்தானியாவில் 40 ஆண்டுகளாக தன் மனைவி உஷாவுடன் (62) வாழ்ந்துவருபவர் காந்து பட்டேல் (68).

ஊரடங்கின்போது, ஒரு நாள் தோட்டவேலை செய்யும்போது தன் தோட்டத்தில் இருந்த சாக்கடை மூடியை திறந்து பார்க்க திட்டமிட்டுள்ளார் பட்டேல்.

தன் நண்பர்கள் உதவியுடன் அந்த மூடியைத் திறக்க, அவருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது, காரணம், அது சாக்கடை அல்ல, 40 பேர் வரை மறைந்திருக்கக்கூடிய, இரண்டாம் உலகப்போர்க்கால பதுங்கு குழி!


அந்த குழியை அழகுபடுத்தி, ஒரு மதுபான விடுதியாக மாற்ற முடிவு செய்துள்ளார்பட்டேல். அந்த மதுபான விடுதி, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமாம்.