ஐந்து வருட காதல்… பெற்றோர் எதிர்ப்பால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

671

சென்னையில்..

சென்னை பெரம்பூர் சேர்ந்தவர் கோபி என்பவரின் மகள் ஆர்த்தி. இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த மாணவி வழக்கம்போல் தனது பணிகளை செய்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பற்றியதால் வலியால் அவர் அலறிதுடித்தார். ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு பதறி துடித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறைக்குள் சென்று மகளை மீட்க போராடினர்.

சிறிது நேரத்துக்கு பிறகு ஆர்த்தி மீது பற்றிய தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உடலில் 65 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தியும், ஆகாஷ் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.