காணாமல் போன வியாபாரி… எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

358

கள்ளக்குறிச்சி..

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை கடை வியாபாரியான இவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தோஷ்குமார் காணாமல் போயிருக்கிறார். அவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள் கடைசியில் பொலிசில் புகார் அளித்தனர்.


அதன் பின்னர் கெடிலம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்தனர். பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது, அது காணாமல் போன சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது சந்தோஷ்குமாரின் மனைவி வசந்தகுமாரிக்கும், சேலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிசார் செல்போனில் தொடர்புகொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொலிசார் வசந்தகுமாரி மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.