தப்பி தவறி கூட வெயில் காலத்தில் இதெல்லாம் சாப்பிடாதீங்க!

503

வெயில்…………..

வெயில் காலங்களில் நமது உடலின் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும், எனவே உடல் உபாதைகள் ஏற்படாமல் தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

►சிக்கன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடல் சூட்டை அதிகரித்து வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். அசைவப் பிரியர்கள் மட்டன், மீன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

► வெயில் அதிகரிக்கும் இந்த நேரத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது.


► காபி, தேநீர் அ.டி.க்கடி கு.டி.ப்.பதைத் தவிருங்கள். பதிலாக கிரீன் டீ அருந்தலாம்.

► இனிப்பு வகைகளையும் குறைவாக சாப்பிட வேண்டும். குறிப்பாக சர்க்கரையைத் தவிர்க்கலாம்.

► குளிர்ச்சியான குளிர்பானங்கள், குளிர்ச்சியான சோடாக்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக வெயிலில் சென்றுவிட்டு உடனடியாக குளிர்பானங்களை அருந்தினால் உடலில் பல்வேறு பி.ர.ச்.னைகள் ஏற்படும்.

► கோடையில் குளிர்ந்த தண்ணீரை அருந்துவதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரைக் கு.டி.ப்.ப.தே நல்லது.

► அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை, எனவே இவற்றை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

►சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். கோதுமை, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.