துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடலை டிரம்மில் புதைத்த நபர் : அதிர்ச்சி சம்பவம்!!

252

சென்னை…

சென்னையில் சொத்து தகராறில் நபர் ஒருவர், தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன்(80). இவருக்கு குணசேகரன்(47) என்ற மகனும், காஞ்சன மாலா, யமுனா, பரிமளா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

குமரேசன் தனது வீட்டின் மேல் தளத்திலும், அவரது மகன் குணசேகரன் தனது குடும்பத்தினருடன் கீழ்த்தளத்தில் வசித்து வந்தனர். கணவர் இறந்துவிட்டதால் காஞ்சன மாலா தனது தந்தையுடன் அவருக்கு உதவியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி மாமியார் வீட்டிற்கு சென்று திரும்பிய காஞ்சன மாலா வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீடு பூட்டியிருந்ததுடன் வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த காஞ்சன மாலா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.


அப்போது வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக சிசிடிவி கெமராவை ஆய்வு செய்தபோது, குணசேகரன் மேல்தளத்தில் இருந்து ஒரு டிரம்மை கீழே கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தனிப்படை ஒன்றை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார், குணசேகரனின் மனைவியிடம் விசாரித்தபோது அவரது கணவர் வெங்கடேசன் என்பவரை பார்க்க காவேரிப்பாக்கம் சென்றதாக தெரிவித்தார்.

உடனே காவேரிப்பாக்கம் சென்ற பொலிசார், வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் டிரம்முடன் வந்த குணசேகரன் அதனை நிலத்தில் புதைக்க வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், டிரம்மில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாகவும், மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் அதனை டிரம்மில் அடைத்து விட்டதாகவும் குணசேகரன் கூறியுள்ளார்.

மந்திரவாதி அந்த டிரம்மை நிலத்தில் புதைக்க வேண்டும் என்று கூறியதால் இங்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய வெங்கடேசன் நபர் ஒருவரை துணைக்கு அழைத்து, அந்த டிரம்மை பள்ளம் தோண்டி நிலத்தில் புதைக்க உதவியுள்ளார்.

பின்னர் வெங்கடேசனை அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட டிரம்மை பொலிசார் தோண்டு எடுத்தனர். அதனுள் குமரேசனின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது.

குமரேசன் தனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து மாதந்தோறும் வரும் இரண்டரை லட்சம் ரூபாயை பணத்தை, அவரது மூன்று மகள்களுக்கும் பிரித்து கொடுத்து வந்துள்ளார். மேலும் தனது ஓய்வூதிய பணத்தையும் அவர்களுக்கு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி குமரேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில், குமரேசனை அடித்துக் கொன்ற குணசேகரன், அவரது உடலை மறைக்க இவ்வாறு டிரம்மில் அடைத்து புதைத்து விசாரணையில் தெரிய வந்தது.

தலைமறைவான குணசேகரனை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூனியம் இருப்பதாக டிரம்மை புதைத்த நபர்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்