துப்பட்டா அணியாத பெண்களிடம் பாலியல் சீண்டல்.. வசமாக சிக்கிய இளைஞன்!!

708

சென்னையில்..

சென்னை அண்ணா நகர், ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக சாலையில் செல்லும் அழகான பெண்கள் மற்றும் மார்டன் உடையில்,

சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்களை பார்க்கும் நபர் ஒருவர் அவர்கள் மீதான மோகத்தில் பின் தொடர்ந்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தொடர்ந்து துணை ஆணையரிடம் புகார்கள் குவிந்தன.

திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, நொளம்பூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


இதில் சரவணன் என்பவர் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து உதவி ஆய்வாளர்கள் ராஜா, தேவசேனா,

ரமேஷ் தலைமை காவலர் ராயப்பன், முதல் நிலை காவலர் குமரவேல் மற்றும் ரவிச்சந்திரன், பார்த்திபன் அக்னிராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் சரவணனை கைதுசெய்ய முயன்றனர்.

அப்பொழுது போலீசாரிடமிருந்து சரவணன் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாலையோரம் மழைநீர் வடிகாலில் இடுப்பளவு பள்ளத்தில் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதால்,

முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.