நித்தியானந்தம் காதலித்து ஏமாற்றிவிட்டான் : கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம் சிக்கியது!!

464

நர்மதா…

தனது மரணத்திற்கு தனது காதலன் நித்தியானந்தம் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

தந்தை இறந்துவிட்டதால், தாயார் ஜோதியுடன் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், நித்தியானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.


இந்நிலையில் நர்மதா கர்ப்பமாக இருந்ததால், இந்த விடயம் உறவினருக்கு தெரியவரவே, நித்தியானந்தம் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய பேசியுள்ளனர்.

அதற்கு நித்தியானந்தம் தரப்பு மறுத்துள்ளதோடு, நர்மதாவின் கருவை கலைத்து விடவும் கூறியுள்ளனர். இதைக் கேட்ட நர்மதா மனமுடைந்த நர்மதா தற்கொலை செய்ய முடிவெடுத்ததோடு,

தனது மரணத்திற்கு நித்தியானந்தன் தான் காரணம் என்று கடிதமும் எழுதிவைத்துள்ளார். இந்த கடிதத்தினைக் கைப்பற்றிய பொலிசார் நித்தியானந்தம் மீது வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.