பப்பாளி பழத்தை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா?

704

பப்பாளி……..

பப்பாளி பழமானது உடலுக்கு பல நோய்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. இதில், பீட்டா கரோட்டின் போன்ற ஆண்டிஆக்சிடெண்ட் கரோட்டினாய்டுகளின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது.

இது நம் பார்வை சக்திக்கும் மிகவும் பயனளிக்கிறது. இது தவிர, பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலுக்கும் எதிராக செயல்படுகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளி மலச்சிக்கல் போன்ற சூழ்நிலைகளிலும் பயனளிக்கும். இருப்பினும், அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது

அவை, பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. ஆனால், பப்பாளி பழத்தை உட்கொண்டால், அது வயிற்றின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.


மேலும், பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பில் தொந்தரவை ஏற்படுத்தும். அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும். பப்பாளி சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றால் சிலருக்கு சில எதிர்விளைவுகளும் ஏற்படலாம்.

வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அரிப்பு ஆகியவை இந்த எதிர்விளைவுகளில் அடங்கும். ஆகையால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.