பைக் மெக்கானிக்குடன் பள்ளி மாணவி காதல் : காதல் பட பாணியில் தனி வீட்டில் குடித்தனம் : நடந்த விபரீதம்!!

3154

கன்னியாகுமரியில்..

காதல் பட பாணியில் பைக் மெக்கானிக், பள்ளி மாணவியை காதலித்து தனியாக அழைத்து சென்று குடித்தனம் நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த நவம்பர் மாதல் 21-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை, 60,000 ரொக்கப்பணம் மற்றும் செல்போனுடன் சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் சிறுமியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்ததில் ஒரு செல்போன் எண் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இயங்குவது தெரியவந்தது. இதனையடுத்து டிசம்பர் 5-ம் தேதி காலை சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு சென்ற போலீசார் அங்குள்ள பங்களா வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

அப்போது மாயமான பள்ளி மாணவி வாலிபர் ஒருவருடம் இருந்துள்ளார். இதனையடுத்து இருவரையும் மீட்ட போலிசார் அவர்களை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் வைக்கல்மேடு பகுதியை சேர்ந்த 22-வயதான லச்சி பிரபு என்பதும் பைக் மெக்கானிக் ஆன இவருக்கு பள்ளி மாணவியும் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்த இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் நகைகளை அடகு வைத்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டதும்,

பின்னர் அங்கேயே ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியதும் போலிசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லச்சி பிரபு வை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.15,000 மற்றும் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டதோடு,

மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லச்சி பிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.