மனைவிக்கு பாலியல் தொல்லை : வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி கூறிய கணவன்!!

261

நாமக்கல்லில்..

நாமக்கல் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை தட்டிக்கேட்ட்ட கணவனை அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது போலீசார் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படமானது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் விருமன் திரைப்படமானது நான்கு காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு காட்சியில் தம்பதியினர் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.


இதனை தனது கணவரிடம் கூறவே கணவர், இளைஞர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் கணவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் திரையரங்குக்கு வந்த காவல்துறையினரும் அந்த நபரை, கண்மூடித்தனமாக தாக்கும் கும்பலிடம் இருந்து அவரை மீட்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் மர்ம கும்பலிடமிருந்து தனது கணவரை மீட்க நீண்ட நேரமாக போராடி உள்ளார் அந்த பெண். அந்த இளைஞர்கள் அப்பெண்ணையும் கண்மூடி தனமாக தாக்கவே அப்பகுதியிலேயே பெண் மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் அவரை தனது தோளின் மீது தூக்கிக்கொண்டு அங்கே நின்றிருந்த காவல்துறையிடம் நன்றி எனக் கூறிவிட்டு அரசு மருத்துவமனைக்கு கணவர் கொண்டு சென்றது பெரும் வேதனை அளிக்கும் காட்சியாக உள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.