யார் இந்த பெண் தாதா லோகேஸ்வரி? போலீசாரை மிரளவைக்கும் கவுன்சிலர் கொலை வழக்கு!!

1052

காஞ்சிபுரம்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெரிவைச் சேர்ந்தவர் சதீஷ் (31).

திமுகவை சேர்ந்த சதிஷ் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடந்து வந்துள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் திமுக கவுன்சிலராக வெற்றி பெற்ற சதிஷ் சமூக விஷயங்களில் அக்கறையுடன் செயல்பட்டுள்ளார். தனது பகுதியில் நடக்கும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சதீஷின் குரலை ஒடுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளது பெண் தாதா தலைமையிலான கொலைகார கும்பல்.

நடுவீரப்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் நடந்த சாராய விற்பனையை குறித்து சதிஷ் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த புகார் சாராய வியாபாரி லோகேஸ்வரிக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.


லோகேஸ்வரி என்பவர் காஞ்சிபுரத்தில் முளைத்து வரும் ரவுடிகளில் ஒருவர். இவர் ஏற்கனவே தனது கணவனை கொலை செய்துவிட்டு அரசியல் பிரமுகரின் செல்வாக்கில் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

கள்ளச்சந்தையில் மது விற்பது, பாலியல் தொழில், கொலை உள்ளிட்ட பல வழக்குகள் லோகேஸ்வரி மீது உள்ளன. இருப்பினும் காவல் நிலையத்துக்கே சென்று மாமூல் கொடுத்து தனது தொழிலை செய்து வந்துள்ளார். சோமங்கலம் காவல் நிலையத்திற்கு அடிக்கடி லோகேஸ்வரி ஸ்கூட்டியில் சென்று வருவார் என்றும் அவர் பின்னாடி பாடி கார்டுகள் அணி வகுத்து வருவார்கள் என்றும் நடுவீரப்பட்டு வட்டாரம் கூறுகிறது.

இந்நிலையில், கவுன்சிலர் சதிஷ் தனக்கு எதிராக செயல்படுவதை விரும்பாத லோகேஸ்வரி பலமுறை சமாதான பேச்சில் ஈடுபட்டுள்ளார். ஆனால், சதிஷ் எதற்கும் ஒத்து வராததால் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சதீஷை தனது வீட்டுக்கு பேச அழைத்த லோகேஸ்வரி கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொலையான சதீஷின் உடலை தெருவுக்குள் இழுத்து வந்து போட்டது அப்பகுதியினரை கதி கலங்க வைத்துள்ளது.

பெண் தாதா என்ற அழைக்கப்படும் லோகேஸ்வரி, தனது விஷயங்களில் தலையிடுபவர்களை முதலில் அழைத்து பேசுவாராம். அவர்களது வீக்னஸ் பாயிண்ட் எது என்று அறிந்து, மது, பெண்களை கொண்டு ஆப் செய்து விடுவாராம். எதுக்கும் ஒத்து வரவில்லை என்றால் கொலை தானாம்.

லோகேஸ்வரி தன்னுடைய பாதுகாப்புக்காக, முக்கிய ரவுடிகள் மட்டுமல்லமால் சிறிய ரவுடிகளுடனுன் ‘அட்ஜஸ்’ செய்துகொள்வார் என்றும் கூறுகின்றனர். தற்போது கவுன்சிலர் சதீஷை கொலை செய்த வழக்கில் லோகேஸ்வரி, கூட்டாளிகள் நவமணி, அன்பு, ராஜேஷ், சதிஷ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காவலில் எடுத்து விசாரித்த பிறகே சதீஷை கொலை செய்ததற்கான காரணம் தெரிய வரும் என்கின்றனர். இந்நிலையில், லோகேஸ்வரியை குறித்து புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று சதீஷின் குடும்பம் வேதனை தெரிவிக்கிறது.