ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த ஆசிரியை : கதறித் துடிக்கும் கணவர்!!

6502

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவருக்கு வயது 43. திமுக ஒன்றிய துணை செயலாளரான சதாசிவம் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி 38 வயது அனிதா.இவர் குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 மகன்கள். சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் வாக்குவாதம் முற்றிவிடும்.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை அனிதா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்துார் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண் உடல் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குடும்ப பிரச்சனை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.