11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்கள் : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

561

விழுப்புரம்..

மேல்மலையனூர் அருகே 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 11- ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக மாணவியின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் பழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் (27) மற்றும் சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த வாசு (26) ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக உள்ள இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் 8 மாதம் கர்ப்பமாக உள்ள பள்ளி மாணவியை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து அதனைத் தொடர்ந்து விழுப்புரம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

பள்ளி மாணவியை இரண்டு வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.