15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த இயக்குனர்! நடிகை செய்த செயல்…!

800

பிரபல இயக்குனர் ஒருவர் 15 ஆண்டுகளாக வறுமை காரணமாக பிச்சை எடுத்து வாழ்த்து வந்த நிலையில், இதை அறிந்து நடிகை அவருக்கு செய்த உதவி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

பிரபல இந்தி நடிகையும். சமூக சேவகருமான ராஜஶ்ரீ தேஷ்பாண்டே, ஆங்கிரி இந்தியன் காடஸ், கிக், மம், மன்டோ, உட்பட பல படங்கலில் நடித்துள்ளார்.

செக்ஸி துர்கா, ஹராம் ஆகிய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த கொரோனா காலத்தில் சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு தொண்டு நிறுவனம் தங்களால் இயன்ற உதவி செய்து வருகின்றன.

அந்த வகையில் மும்பை சாலை ஓரத்தில் வசித்து வந்த இயக்குனர் முன்னா ஹூசைனின் நிலையைப் பார்த்து, தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபர், உடனடியாக நடிகையான ராஜஶ்ரீ தேஷ்பாண்டேவிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின், அவர் உடனடியாக முன்னா ஹூசைனை சந்தித்துப் பேசினார். ஆனால், அவருக்கு கேட்கும் திறன் இல்லை. பக்கவாதமும் தாக்கி இருக்கிறது. இது குறித்து நடிகை ராஜ ஶ்ரீ தேஷ்பாண்டே கூறுகையில்,இவருக்கு சிலர் உதவி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, சின்ன சின்ன வேலைகள் செய்து முயற்சி செய்திருக்கிறார்.


ஆனால், பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மொத்தமாக அவர் இழந்துவிட்டார். தற்போது தனது முயற்சியின் மூலம் ஹோம் ஒன்றில் அவரைச் சேர்த்திருப்பதாக கூறியுள்ளார்.

முன்ன ஹீசைன் 1982 ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா ஆசையில் மும்பையில் பல பாலிவுட் படங்களுக்கு புரொடக்‌ஷன் அசிஸ்டென்டாக பணியாற்றி இருக்கிறார்.

அப்போது வாடகை வீட்டில் குடியிருந்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது மொத்த சேமிப்பு தொகையான 30 லட்சம் ரூபாயை கொண்டு 1998-ஆம் ஆண்டு ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார்.

அது தோல்வியில் முடிந்தது. பிறகு தனது குடும்பத்தை இழந்துவிட்டார். இதனால் கடந்த 15 வருடமாக வறுமை காரணமாக பிச்சை எடுத்து, பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோ அருகில் நடைபாதையில் வசித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.