தென்காசி…
ம.துவுக்கு தந்தை அ.டிமையானதால் மனமுடைந்த 15 வயது மகன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் தென்காசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பான்குளம் அருகே உள்ள மைலப்பபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்ரீகணேஷ் (15), அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
லட்சுமணன் ம.துவுக்கு அ.டியாகிய நிலையில், அவரது மகன் கேட்டுக் கொண்டதன் பேரில், கடந்த 4 ஆண்டுகளாக கு.டிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலின் போது, நண்பர் ஒருவர் ம.து வாங்கிக் கொடுத்தால், லட்சுமணன் கு.டித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்ததும், தந்தை கு.டித்திருப்பதைக் கண்டு ஸ்ரீகணேஷ் மனமுடைந்து போயுள்ளார்.
இதைத் தொடர்ந்து,7ம் தேதி தோட்டத்திற்கு சென்ற அவர், த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டிவு செய்து பூச்சிக் கொல்லி மருந்தை கு.டித்துள்ளார். பிறகு, தனது மாமாவிற்கு தொடர்பு கொண்டு, ‘நான் வி.ஷ.ம் கு.டித்து விட்டேன்.
இனிமேலாவது தந்தையை கு.டிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்,” எனக் கூறி விட்டு, போனின் அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ந்து போன அவரது மாமா மற்றும் உறவினர்கள், தோட்டத்திற்கு சென்று, அங்கு மயங்கி கிடந்த ஸ்ரீகணேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ம.துவுக்கு அ.டிமையான தந்தையை திருத்துவதற்காக, மகன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.