நீட் தேர்வெழுதிய மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

49

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த 18 வயது மாணவி பாகிஷா, நேற்று முன் தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்று மன அழுத்தத்தில் தான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை, மத்திய பிரதேச மாநிலம், ரேவா நகரைச் சேர்ந்த பாகிஷா திவாரி (18) என்ற நீட் பயிற்சி மாணவி, நேற்று மாலை கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தான் தங்கியிருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்நிலையில் மாணவி பாகிஷா திவாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது தாய் மற்றும் சகோதரருடன் மாணவி பாகிஷா வசித்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி மஹராவ் பீம் சிங் (எம்பிஎஸ்) மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மாணவியின் தந்தை கோட்டாவுக்கு வந்த பிறகு, பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீட் பயிற்சி பெற்ற வந்த மாணவி பாகிஷா திவாரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த ஆண்டில் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கல்வியாளர்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.