பிரான்ஸில் கறுப்பின கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்தும் SNCF அதிகாரிகள்!!

949

16 ம் திகதி, (Seine-Saint-Denis) Aulnay-sous-Bois தொடருந்து நிலையத்தில், ஒரு கறுப்பினப் பெண்ணை, கடுமையான வன்முறையுடன், SNCF தொடருந்துப் பாதுகாப்புத் துறையினர் (sûreté ferroviaire – SNCF) கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண் தயவு செய்து என் வயிற்றில் அழுத்தாதீர்கள் என்று கதற, அவருடன் உடன் வந்தவர், அந்தப் பெண் கர்ப்பிணி, வன்முறையை நிறுத்துங்கள் என்று சத்தமிட, இரண்டு பாதுகாப்புப் பிரிவினரால், கடுமையான வன்முறை நடாத்தபட்டுள்ளது.

அந்தப் பெண்ணை இழுத்துவந்து நிலத்தில் எறிந்து, குப்புற வீழ்த்தி, கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு நிலத்தில் அழுத்த, மற்றவர், அந்தப் பெண்ணின் முகத்தில் முழங்காலால் அழுத்தி, மிகவும் கடுமையான வன்முறையுடன் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் அதிகாரத்தில் 10 சதவீதம் கூட இல்லாத இந்தத் தொடருந்துப் பாதுகாப்புப் பிரிவினர், அதீதமான வன்முறையுடன் நடந்து கொண்டுள்ளனர்.

இவருடன் வந்த நபர், அந்தப் பெண் மீது வன்முறைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று சத்தமிட்டதால், அவரும் சுவற்றுடன் சாத்தி வைத்து, விலங்கிடப்பட்டுள்ளார்.


அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் இந்த வன்முறையைக் காணொளியில் பதிவு செய்ய, SNCF ஊழியர் ஒருவர் அதனைத் தடுக்க முயன்றுள்ளார்.

அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் இந்த வன்முறையைக் காணொளியில் பதிவு செய்ய, SNCF ஊழியர் ஒருவர் அதனைத் தடுக்க முயன்றுள்ளார்.

அதையும் மீறிப் பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளி, சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினரின் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், Aulnay-sous-Boisவின் வன்முறை எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Seine-Saint-Denisல் உள்ள Aulnay-sous-Bois நிலையத்தில் நடந்த இச் சம்பவம் தொடர்பில் பின் வெளி வந்த தகவல் அடிப்படையில்,

அப்பெண் திடீரென தரையில் அழுத்தப்படுகிறாள். ஆனால் அவள் கணவன் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பாதுகாப்பு முகவர்களை நோக்கி சத்தமிட்டபோதும் அதை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை SNCF அதன் பங்கிற்கு, அதன் சூழலில் இருந்து விலகி, காணொளியின் “தவறான” விளக்கங்களை கண்டித்தது.

“குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டது” முகமூடி அணியாதது, துப்பியது மற்றும் பயணசிட்டை இல்லை என்றும், முகவர்களின் உத்தரவு இருந்தபோதிலும் அவர் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

ரயில்வே பாதுகாப்பு முகவர்கள் அந்த இளம் பெண்ணின் மருத்துவ கவனிப்புக்காக SAMU தொடர்புகொண்டு ஒப்படைத்தனர். ஏழு மாத கர்ப்பிணி 23 வயது பயணி சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஒரு கர்ப்ப பரிசோதனையில் அவர் 7 மாத கர்ப்பிணி என்பது உறுதி செய்யப்பட்டது. உடன் வந்த அவரது கணவர் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கர்ப்பிணிப்பெண் SAMUஇன் கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று SNCF பாதுகாப்பு முகவர்கள் அப்பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.